மாவீரர் நாளுக்கு தடைகோரி பருத்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம்..! பொலிஸார் பின் வாங்கினர்..
மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைவிதிக்ககோரி பருத்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீள பெறப்பட்டுள்ளது.
இலங்கை குற்றவியல் சட்டக்கோவை 106ஆம் பிரிவின் பொதுத் தொல்லையின் கீழ் இந்த விண்ணப்பங்கள் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய
3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் தனித் தனியே தாக்கல் செய்யப்பட்டன. எதிர் மனுதாரர்களாக நினைவேந்தலை நடத்தும் ஒவ்வோருவர் உள்பட சிலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டன.
இந்த விண்ணப்பங்கள் கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் அழைக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று விண்ணப்பங்கள் மீளவும் பதில் நீதிவான் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது மன்றில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ், சசந்திரசேகரம்,
உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.பொலிஸாரின் விண்ணப்பங்களுக்கு பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளினால் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
விண்ணப்பங்களை மீளப்பெறுவதாக பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.