கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்து..! ஒருவர் படுகாயம்..
யாழ்.கொடிகாமம் - கெற்பேலி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து காயமடைந்தவர் உடனடியாக பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.