யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் உயிரிழந்த நபருக்கு தொற்றில்லை..! பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..
யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த குடும்பஸ்த்தருக்கு கொரோனா தொற்று இல்லை. என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பளை - புலோப்பளையை சேர்ந்த 47 வயதான குடும்பஸ்த்தர் ஒருவர் காய்ச்சலுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் அவருக்கு தொற்றில்லை என பீ.சி.ஆர் முடிவுகள் வெளியாகியுள்ளது.
சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், ஒருவர் இன்று உயிரிந்திருந்திருந்தார்.அவருக்கு கொரோனாத் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.