பெற்றோரின் கவனயீனம்..! இரு அப்பாவி குழந்தைகள் உயிரிழந்த சோகம், யாழ்.மண்டைதீவில் இன்று மாலை..
யாழ்.மண்டைதீவில் நீர் நிறைந்த குழியில் தவறி விழுந்து இரு குழந்தைகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன. இந்த கோர சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 7 வயதான சாவிதன், 5 வயதான சார்வின் என் இரு குழுந்தைகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.