யாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்தில் பாதணி மற்றும் தடிகள், பனமட்டைகள் பொலிஸார் அடாவடி..! பக்தர்கள் கொந்தளிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்தில் பாதணி மற்றும் தடிகள், பனமட்டைகள் பொலிஸார் அடாவடி..! பக்தர்கள் கொந்தளிப்பு..

யாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்தில் இன்று  வெள்ளிக்கிழமை சைவ சமயத்தவரின் மிக முக்கிய விரதத்தில் ஒன்றான கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசங்கார நிகழ்வை தரிசித்து தமது விரதத்தினை பூர்த்தி செய்வதற்காக வந்த பக்தர்களை நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்க வைத்து 

அசௌகரியங்களிற்கு உட்படுத்தினர். இந்த நடைமுறை மூலம் எந்த விதமான சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும் என கூறியிருக்கும் தமிழர் விடுதலை கூட்டணியின் சிரேஷ்ட துணை தலைவர் ச.அரவிந்தன், 

 இந்த புனித ஆலய வீதிகளில் காவல்துறை அதிகாரிகள் பாதனிகளோடு  தடிகள் மற்றும் பனம் மட்டைகள் கொண்டு பக்தர்களை விரட்டிய சம்பவத்தை மிகவும் வன்மையாக நாம் கண்டிக்கின்றோம். எதிர்வரும் காலங்களிளாவது ஆலய புனிதத்தினை பேனிப்பாதுகாத்து 

இந்து சமய புனிதத்தினை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் மாவட்டத்திற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரியையும் கேட்டுக்கொள்கின்றோம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு