யாழ்.நகரில் அங்காடி வியாபாரங்களை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்..! யாழ்.மாவட்டத்தில் 459 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில், மாவட்ட செயலர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் தற்போது 459 குடும்பங்களை சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

மக்கள் வெளியே போவது மிக ஆபத்தான விடயம். வெளி மாவட்டத்திலிருந்து யாழ் மாவட்டத்திற்கு வருவோர் கட்டாயமாக தமது பகுதியில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் 

தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும்.

கூடுமான வரைக்கும் அங்காடி வியாபாரங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வெளி மாவட்டங்களிலிருந்து வந்து அங்காடி வியாபாரம் செய்பவர்கள் தமது வியாபாரத்தை 

தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு