யாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரை பொலனறுவை சிறப்பு வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை..! வீடுகளிலேயே தற்போது..

ஆசிரியர் - Editor I

யாழ்.பருத்துறை மற்றும் கரவெட்டி பகுதிகளில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 3 பேர் பொலனறுவை கொரோனா சிறப்பு வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கரவெட்டி இராஜகிராமம், பருத்தித்துறை மற்றும் பொலிகண்டி பகுதிகளைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

நாடாளாவிய கொரோனா சிறப்பு வைத்தியசாலைகள் முழுவதுமாக நோயாளர்கள் நிறைந்ததை அடுத்து தொற்று உறுதியானவர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இவ்வாறு தொற்று உறுதியான மூவரையும் பொலன்னறுவை கொரோனா சிறப்பு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக

மாகாண சுகாதார சேவை திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் தொிவித்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு