“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I

மருதனார்மடம் சந்தையில் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிட தொகுதியில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடம்போதுமானதாக இல்லை. என கூறி வியாபாரிகள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

“வலி,தெற்கு பிரதேசசபையே வியாபாரிகள் வயிற்றில் அடிக்காதே” என்ற கோஷத்துடன் வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை புறந்தள்ளி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 

பிரதேச சபையினால் வழங்கப்பட இருக்கும் இடத்தின் அளவு தமது வியாபார நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு போதுமானதாக இல்லை என வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “மக்கள் பிரதிநிதிகளான உங்களுக்கு எங்களை மக்களாக தெரியவில்லையா” “எமக்கு உரிய இடத்தினை பழையதுபோல் நிறைவாகத் தாருங்கள்”. 

“உங்களுடைய முதலாலித்துவ அதிகாரத்தை ஏழைப் பாட்டாளிகள் மீது திணிக்காதே.”. “வேண்டும் வேண்டும் நியாயம் வேண்டும்” ,என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

அத்தோடு தமக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டுமென கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஒளிப்படங்கள் அடங்கிய பதாதைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கையில் ஏந்தியிருந்தனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக கடந்த 22ஆம் திகதி பிரதேச சபைக்கு முன்பாகவும் வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு