ஆனையிறவில் கோர விபத்து..! தாயும், மகனும் பலி, எரிபொருள் தாங்கி வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து..

ஆசிரியர் - Editor I
ஆனையிறவில் கோர விபத்து..! தாயும், மகனும் பலி, எரிபொருள் தாங்கி வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து..

கிளிநொச்சி- ஆனையிறவு பகுதியில் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர். 

முச்சக்கரவண்டியும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி வைத்தியசாலயில் அனஉமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் யாழ்ப்பாணம் நீராவடி பகுதியை சேர்ந்த 58 வயதான ராதாகிருஸ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய ராதாகிருஷ்ணன் கிருபானந்தன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

வாகனத்தை செலுத்திய எரிபொருள் கொள்கல வாகன சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு