யாழ்.அச்சுவேலி விபத்தில் ஒருவர் பலி..! கட்டுப்பாடற்ற வேகம், மின்கம்பம் மீது கார் மோதி விபத்து..

ஆசிரியர் - Editor I

யாழ்.அச்சுவேலி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

கட்டுப்பாடற்ற வேகத்தில் பயணித்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போதே காரில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

2ம் இணைப்பு..

குறித்த விபத்தில் அச்சுவேலி குட்டியப்புலம் பகுதியை சேர்ந்த சீலன் வயது-31 என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு