யாழ்.குருநகர் மற்றும் பாசையூர் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு..! இராணுவம், பொலிஸார் கடமையில்..
யாழ்.குருநகர் பகுதியில் உள்ள கடலுணவு நிலையத்தில் பணியாற்றிய இருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் குருநகர் மற்றும் பாசையூர் பகுதிகளுக்குள் வெளியாட்கள் நுழைவது தடை செய்யப்பட்டிருப்பதுடன்,
குருநகர், பாசையூர் பகுதிகளுக்குள்ளும் மக்களின் நடமாட்டம் குறைகக்ப்பட்டிருக்கின்றது. குறித்த இரு பகுதிகளுக்கும் தனிமைப்படுத்தல் முடக்கம் சுகாதார அதிகாரிகளினால் கோரப்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை அப்பகுதியை ஆராந்த பொலிஸார் மற்றும் யாழ்.மாநகரசபை முதல்வர் ஆகியோர்.
பொலிஸார் மற்றும் படையினரின் ஒத்துழைப்புடன் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியிருப்பதுடன், போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கின்றனர்.