முதியவர் மீது சரமாரி வாள்வெட்டு..! யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று மாலை சம்பவம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் முதியவர் ஒருவர் மீது இன்று மாலை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

இன்று மாலை குறித்த முதியவரின் வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக கூறப்படுகின்றது. 

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

பலத்த காயத்திற்குள்ளன 62 வயது மதிக்கத்தக்க முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு