நாடாளுமன்றில் மக்களின் அதிக பிரச்சினைகளை பேசுகிறார் டக்ளஸ்..!
நாடாளுமன்றத்தில் தினந்தோறும் ஏராளமான மக்கள் நலன்சார் பிரச்சினைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற நிதி அறவீடுகள் தொடர்பான விவாதத்தின்போது கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்தனினால் குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் -பொதுமக்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றில் கட்சித் தலைவர்கள் வெளிப்படுத்துவதற்கு எந்தவிதமான வரையறைகளும் கிடையாது
எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தினமும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதாகவும் சுட்டிக்காட்டினார்.