வீதியால் சென்றுகொண்டிருந்த பெண்ணின் பண பையை பறித்துக் கொண்டு ஓடியவர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார்..!
யாழ்.புன்னாலைகட்டுவன் பகுதியில் வீதியால் சென்ற இளம் பெண்ணின் பணப்பையை பறித்தக்கொண்டு ஓடியவர் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதன் பின்னர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை-09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி இளைஞன் யாழ். மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் எனவும், இவர் சுன்னாகம், மல்லாகம் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல வழிப்பறித் திருட்டுக்களுடன்
தொடர்புடையவரெனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்ற.