நீண்ட நாட்களாக விடுமுறை இல்லை..! தற்கொலைக்கு முயன்ற பொலிஸ் அதிகாரி, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சம்பவம்..
யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமக்கு நீண்ட நாட்களாகியும் விடுமுறை வழங்கப்படவில்லை என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தமக்கு விடுமுறை வழங்குமாறு கேட்டுள்ளார்.
எனினும் அவருக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. இதனால் மன விரக்தி அடைந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அதிகளவான பனடோல் மாத்திரைகளை உட்கொண்டு
தவறான முடிவெடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாதிப்புக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.