யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வன்செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தனுரொக் உள்ளிட்ட 9 வன்முறையாளர்கள் அதிரடிப்படையால் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வன்செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தனுரொக் உள்ளிட்ட 9 வன்முறையாளர்கள் அதிரடிப்படையால் கைது..!

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் வன்முறை கும்பலை சேர்ந்த தனுரொக் உள்ளிட் 9 வன்முறையாளர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் 9 பேரும் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தனுரொக் உள்ளிட்ட 9 பேர் ஒன்றுகூடியுள்ளதால் வன்முறைச் சம்பவம் இடம்பெறலாமென கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர். 

எனினும் சந்தேக நபர்கள் 9 பேருக்கும் எந்தவொரு வழக்கும் நீதிமன்றங்களில் நிலுவையில் இல்லை என்றும் முறைப்பாடுகள் எவையும் மானிப்பாய் பொலிஸுல் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

தனுரொக் உள்ளிட்ட 9 பேரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு