யாழ்.இருபாலை - கட்டப்பிராயில் கோர விபத்து..! பெண் ஒருவர் பலி..

ஆசிரியர் - Editor I

யாழ்.கட்டப்பிராய் பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து அச்சுவேலி நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது. 

கட்டைப்பிராய் பகுதி ஊடாக பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளை செலுத்த முற்பட்டபோது பிரதான வீதியில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளவர் கல்வியங்காடு ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 

ஒரு பிள்ளையின் தாயாரான சுபேசன் பவானி (வயது 33) என்று தெரிய வந்துள்ளது.



காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு