யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் விடுதி முற்றுகை..! விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் கொழும்பை சேர்ந்த இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் விடுதி முற்றுகை..! விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் கொழும்பை சேர்ந்த இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது..!

கோப்பு படம்

யாழ்.நல்லுார் ஆலய சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த விடுதியை முற்றுகையிட்ட பொலிஸார், கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளை சேர்ந்த இரு பெண்களையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். 

நல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணம் பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் யாழ்ப்பாண தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த தங்குமிட விடுதியை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது குறித்த தங்குமிட விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த இரண்டு தென்னிலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 20-25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 

கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு