தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 3 கர்ப்பவதி பெண்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!
தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த கர்ப்பவதி பெண்கள் 3 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக இன்று அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
வெளிநாட்டில் இருந்து வருகைதந்த 256 பேர், ஓகஸ்ட் 9 ஆம் திகதியன்று, கேப்பாப்புலவு விமானப்படைத்தள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலைத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களில் மூன்று கர்ப்பிணி பெண்கள், மகப்பேற்று காலம் நெருங்கிய காரணத்தால், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.