1000 ரூபாய் பெறுமதியிடப்பட்ட 3 நாணய தாள்களுடன் யாழ்.அச்சுவேலி இலங்கை வங்கி கிளையில் பெண்ணொருவர் கைது..!
1000 ரூபாய் பெறுமதியிடப்பட்ட 3 நாணய தாள்களை வங்கியில் மாற்ற முயற்சித்த பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்த சம்பவம் யாழ்.அச்சுவேலியில் இலங்கை வங்கி கிளையில் இடம்பெற்றிருக்கின்றது. இன்று காலை வங்கிக்கு சென்ற
புத்துார்- ஆவரங்கால் பகுதியை சேர்ந்த பெண் 1000 ரூபாய் பெறுமதியிடப்பட்ட 3 நாணய தாள்களை வங்கியில் மாற்ற முயன்றுள்ளார்.
அந்த போலி நாணயத்தாள்கள் அவருக்கு எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன.