மாமனிதர் அமரர் நடராஜா ரவிராஜின் உருச்சிலை வளாகத்திலிருந்த பூச்சாடிகளை சேதமாக்கி அநாகரிகம்..! விசாரணையில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
மாமனிதர் அமரர் நடராஜா ரவிராஜின் உருச்சிலை வளாகத்திலிருந்த பூச்சாடிகளை சேதமாக்கி அநாகரிகம்..! விசாரணையில் பொலிஸார்..

மாமனிதர் அமரர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலை வளாகத்தில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூ சாடிகளை உடைத்து அட்டகாசம் புரியப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கு குழப்பம் காரணமாக சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்களால் ரவிராஜின் சிலைக்கு கறுப்பு,சிவப்பு துணிகள் மூடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த துணிகளும் அகற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பூ சாடிகளை உடைத்தது திருமதி சசிகலா ரவிராஜிற்காக போராட்டம் நடத்திவரும் பெண் ஒருவர் என கூறப்படுகிறது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு