யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! பணிப்பாளர் தகவல்..
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 126 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
இதன்படி பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்,
* போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 13 பேர்
* தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை - 27 பேர் (2 பேருக்கு தொற்று உறுதி )
*பொது வைத்தியசாலை மன்னார் - மூன்று பேர்
* பொது வைத்தியசாலை வவுனியா - ஒருவர்
* சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு கராச்சி கிளிநொச்சி - 26பேர்
* வேலனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 56 பேர்