யாழ்.திருநெல்வேலியில் வீடொன்றில் தீ விபத்து..! வயோதிப பெண்மணி தீயில் சிக்கி பலி..
யாழ்.திருநெல்வேலி பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 67 வயதான வயோதிப பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில்
திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.தீயில் சிக்கி குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார்.இந்த தீ விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில்
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.