யாழ்.கீரிமலை- கூவில் பகுதியில் குண்டு வெடிப்பு..! 3 பேர் காயம், படையினர், பொலிஸ் குவிக்கப்பட்டு விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.கீரிமலை- கூவில் பகுதியில் குண்டு வெடிப்பு..! 3 பேர் காயம், படையினர், பொலிஸ் குவிக்கப்பட்டு விசாரணை..

யாழ்.கீரிமலை- கூவில் பகுதியில் மர்ம வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 

குறித்த பகுதியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு அருகில் இருந்து மர்ம வெடிகுண்டு ஒன்றை மீட்டதாகவும் அதனை பிரித்து பார்க்க முயன்றபோது 

தீ பற்றியதில் அது வெடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த குண்டு வெடிப்பில் 3 பேர் காயமடைந்த நிலையில் மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. 

மேலும் குறித்த பகுதிக்குள் பொதுமக்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

மேலதிக விபரங்களுக்கு இணைந்திருங்கள்..

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு