சென் பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நாளை சிவாஜி நினைவுகூரகூடாது..! தடைகோரி பொலிஸார் விண்ணப்பம், நாளை மன்றில் முன்னிலையாகிறார் சிவாஜி..
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய படுகொலை நினைவேந்தலை நடாத்தவிடாது எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பொதுமக்களுக்கு தடைவிதிக்ககோரி மானிப்பாய் பொலிஸார் முன்வைத்த விண்ணப்பம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு மல்லாகம் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளைமறுதினம் வியாழக்கிழமை நினைவுகூரப்படவுள்ளது. இந்த நிலையிலேயே நினைவேந்தல் நிகழ்வை ஆர்ப்பாட்டமாகச் சித்தரித்து இந்தத் தடை உத்தரவை மனிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் கோரியுள்ளனர்.