தர்க்கம் முற்றியதில் ஒருவர் அடித்து கொலை..! யாழ்.நீர்வேலியில் குரூரம், ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
தர்க்கம் முற்றியதில் ஒருவர் அடித்து கொலை..! யாழ்.நீர்வேலியில் குரூரம், ஒருவர் கைது..

யாழ்.நீர்வேலி பகுதியில் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு நபர்களுக்கு இடையில் இருந்த முரண்பாடு, கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இச் சம்பவத்தில் படுகாயமடைந்த செல்வநாயகம் ஜெயசிறி என்பவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். 

வைத்திய சாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், 

உயிரிழந்த நபரை தாக்கியவரை கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு