பட்டப்பகலில் வயதான பெண்மணியை தள்ளி விழுத்தி தாலி கொடியை அறுத்து சென்ற திருடர்கள்..! யாழ்.பொற்பதி வீதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பட்டப்பகலில் வயதான பெண்மணியை தள்ளி விழுத்தி தாலி கொடியை அறுத்து சென்ற திருடர்கள்..! யாழ்.பொற்பதி வீதியில் சம்பவம்..

யாழ்.கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியால் சென்ற வயோதிப பெண்ணின் 9 பவுண் தாலி கொடியை திருடர்கள் அறுத்து சென்ற சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த வீதியால் பயணித்த வயோதிப பெண்ணை பின்தொடர்ந்த திருடர்கள் அவரை தள்ளி விழுத்தி தாலி கொடியை அறுத்து சென்றிருக்கின்றனர். அறுக்கப்பட்ட தாலிக்கொடி 9 பவுண் என கூறப்படுகின்றது. 

இந்த சம்பவம் மக்கள் நடமாட்டம் மற்றும் சன நொிசல் மிக்க பொற்பதி வீதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு