கொரோனா தொற்றுக்குள்ளான யாழ்ப்பாண இளைஞன் பிரான்ஸில் உயிரிழப்பு..!
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம்- மல்லாகத்தை சேர்ந்த இளைஞன் பிரான்ஸ் நாட்டில் உயிரிழந்துள்ளார். பா.அஜந்தன்(வயது40) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கடந்த 1 மாதகாலமாக சிகிச்சை பெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவருடைய இறுதிச்சடங்கு சுகாதார விதிகளின் கீழ் பிரான்ஸ் நாட்டிலேயே நடைபெறவுள்ளது.