நிறை மதுபோதையில், சாரதி அனுமதி பத்திரமும் இல்லாமல் வாகனம் ஓட்டிய சட்டத்தரணி..! நாளை மல்லாகம் நீதிமன்றில் வழக்கு..

ஆசிரியர் - Editor I
நிறை மதுபோதையில், சாரதி அனுமதி பத்திரமும் இல்லாமல் வாகனம் ஓட்டிய சட்டத்தரணி..! நாளை மல்லாகம் நீதிமன்றில் வழக்கு..

மதுபோதையில் சாரதி அனுமதி பத்திரமும் இல்லாமல் வாகனம் ஓட்டிச் சென்ற இளம் சட்டத்தரனி ஒருவருக்கு எதிராக நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தெல்லிப்பழை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்படவிருக்கின்றது. 

தெல்லிப்பழை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தபோது கார் ஒன்றினை வழிமறித்து சோதிக்க முயன்றுள்ளனர். எனினும் கார் நிற்காமல் சென்றிருக்கின்றது. 

இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் பின்தொடர்ந்து சென்று வழிமித்தபோது, காரை ஓட்டிச் சென்றவர் தன்னை ஒரு சட்டத்தரணி என பொலிஸாருக்கு அறிமுகம் செய்துள்ளார். குறித்த நபர் மதுபோதையில் இருப்பதை அறிந்து கொண்ட பொலிஸார் 

சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர். எனினும் லைட் வேகக்கிள்ஸ் சாரதி அனுமதி பத்திரம் அவரிடம் இல்லை. இதனடிப்படையில் மதுபோதையில் சாரதி அனுமதி பத்திரமும் இல்லாமல் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக

தெல்லிப்பழை பொலிஸாரினால் நாளை வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு