காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக கொல்லப்பட்டார்கள்?

ஆசிரியர் - Admin
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக கொல்லப்பட்டார்கள்?

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியிருப்பது போல, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்து போயிருந்தால், அவர்கள் எவ்வாறு? யாரால்? எதற்காக கொல்லப்பட்டார்கள் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கட்டப்பிராயில் உள்ள இல்லத்தில், இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

“காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் அல்லது இறந்து போய் இருப்பார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறுகின்றார்.

பொதுமக்களுக்கு முன்பாகவ சரணடைந்தவர்களும், பெற்றோர்களால் கையளிக்கப்பட்டவர்களும், இறந்து போனார்கள் என்றால், எவ்வாறு இறந்து போனார்கள் என்பதை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வெளிப்படுத்த வேண்டும்.

சரணடைந்தவர்களும், அவர்களிடம் கையளிக்கப்பட்டவர்களும் இறந்து போய்விட்டார்கள் என்று கூறினால், எவ்வாறு இறந்து போனார்கள்? கொலை செய்யப்பட்டார்களா? யாரால் கொல்லப்பட்டார்கள்? அதற்கான காரணம் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

இறுதிப் போரின் போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு, அப்பால் ஒரு அரசாங்கத்திடம் சரணடைந்தவர்கள், அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்று கூறினால், அரசாங்கம் அதற்கான முழு பொறுப்பை ஏற்கவேண்டும்” என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு