அழியும் நிலையில் பிரிந்து சென்றவர்களை வீட்டுக்குள் அழைப்பது நகைச்சுவை!

ஆசிரியர் - Admin
அழியும் நிலையில் பிரிந்து சென்றவர்களை வீட்டுக்குள் அழைப்பது நகைச்சுவை!

தமிழ் அரசுக் கட்சியின் வீடு புற்றெடுத்து, விச நாகங்கள் சூழ்ந்து, அழிந்து போகின்ற நிலையில் இருக்கும் போது, பிரிந்து சென்றவர்களை வீட்டுக்குள் அழைப்பது நகைச்சுவையானது என்று, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

இன்று திருநெல்வேலியில் உள்ள தனது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

‘தமிழ் அரசுக் கட்சியின் வீடு புற்றெடுத்து, விச நாகங்கள் சூழ்ந்து, அழிந்து போகின்ற நிலையில் இருக்கும் போது, பிரிந்து சென்றவர்களை வீட்டுக்குள் அழைப்பது நகைச்சுவையானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் பல ஏமாற்றுக் கதைகளை கூறுவது தெரியும். ஒரு வகையில் அந்த வீட்டுக்குள் அவர்களுடன் நெருக்கமாக பழகியவன் என்ற அடிப்படையில் எனக்கு அது கூடுதலாகவே தெரியும்.

இதுகூட ஒரு தேர்தல் கால குண்டுதான். அடிக்கடி சேனாதிராஜா குண்டுகள் போடுவார் அந்த வகையான தேர்தல் குண்டாகவே இதனை கருதுகினறோம்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் வெறுக்க தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு ஆதரவளித்த மக்கள் பெரும்பாலும் அதிலிருந்து வெளியேறி மாற்று அணியாக விக்னேஸ்வரன் அணியை தெரிவு செய்து எங்களுக்கு ஆதரவை தந்து ஆதரவை பெருகிக் கொண்டிருக்கிறது.

இந்த தேர்தலுடன் அவர்கள் மக்களுடைய அரசியலில் இருந்து அகற்றப்படுவார்கள் என்றும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் மேலும் கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு