காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை கண்டுகொள்ளாத அரசு: ஆனந்தசங்­கரி

ஆசிரியர் - Admin
காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை கண்டுகொள்ளாத அரசு: ஆனந்தசங்­கரி

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டவர்­களின் உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி உற­வி­னர்­களால் ஆரம்­பிக்­கப்­பட்ட போராட்டம் ஒரு வரு­டத்தை எட்­டி­யுள்­ளது. அர­சாங்­கமும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் கண்­டு­கொள்­ளாமல் விட்ட முக்­கிய பிரச்­சி­னைகளில் இது­வு­மொன்று. திரா­ணி­யற்று அர­சிடம் சோரம்போன தமிழ் தலை­மை­களின் செயற்­பா­டு­களால் இந்தப் பிரச்­சினை நீண்­டு­கொண்டே போகி­றது என்று தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் வீ.ஆனந்தசங்­கரி தெரி­வித்­துள்ளார்.


அத்தோடு,காணா­மலாக்­கப்­பட்ட உற­வுகள் மேற் ­கொண்டு வரும் போராட்­டத்­திற்கு அர­சாங்கம் ஒரு தீர்­வினை உட­ன­டி­யாக ஏற்­ப­டுத்தி கொடுக்க வேண்டும். தமிழர்களின் அதி­கப்­ப­டி­யான வாக்­கு­களால் வெற்­றி­பெற்ற நல்­லாட்சி அர­சாங்கம் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களில் ஒன்­றான வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு ஒரு நியா­ய­மான தீர்­வினை கூறாமல் காலம்­ க­டத்தி இழுத்­த­டித்து வரு­கி­றது. இவ்­வி­டயம் ஜன­நா­ய­கத்தை விரும்பும் எவ­ராலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.


இவ்­வி­ட­யத்தை அர­சுக்கு எடுத்­து­கூறி தீர்வைப் பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாத தமிழ் மக்கள் பிர­தி­நி­தி­கள் வெட்கி தலை­கு­னிய வேண்டும். வெற்­றி­பெற்ற தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பல­முறை இவர்­களை பார்த்து சென்றும் பரா­மு­கமாய் இருப்­பது வேதனை தரும் விட­ய­மாகும். இவர்­களின் போராட்­டத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்க முடி­யாத தமிழ் பிர­தி­நி­திகள் தமது பத­வி­களை துறக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு