தனிமையில் வாழ்ந்த மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டார்.

ஆசிரியர் - Editor I
தனிமையில் வாழ்ந்த மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டார்.

மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி ஒருவர் நேற்று சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


இச் சம்பவம் நேற்று நண்பகல் கட்டுடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன் போது அதே இடத்தைச் சேர்ந்த த.இரத்தினதேவி (வயது -74) என்ற மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


அவரது வீட்டு ஓடுகள்  கழற்றப்பட்ட நிலையில் இருந்தன. அதனால் கொள்ளையர்களே மூதாட்டியை கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 


அத்துடன், சடலம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


அவரை மூன்று நாள்களாகக் காணவில்லை என்று அயலவர்கள் நேற்று முற்பகல் தேடிச் சென்றுள்ளனர். இதன்போதே மூதாட்டி சடலமாகக் காணப்பட்டுள்ளார். 


அயலவர்களால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டது. 


சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு