அப்படி என்ன பேசியிருப்பார்கள்?: சைகையில் பேசிய மஹிந்த – ரணில்

ஆசிரியர் - Admin
அப்படி என்ன பேசியிருப்பார்கள்?: சைகையில் பேசிய மஹிந்த – ரணில்

பாராளுமன்றம் நேற்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.  பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளை மீதான விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சபாபீடத்திற்குள் நுழைந்தார்.


இதன்போது கூட்டு எதிர்க்கட்சியினர் பலர் வருகை தந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து சற்று நேரத்தின் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சபாபீடத்திற்குள் நுழைந்தார். இதன்போது இருவரும் கண் அசைவின் ஊடாக  பேசிக்கொண்டனர்.


அதன்பின்னர் விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது தினேஷ் குணவர்தன முன்னாள் ஜனாதிபதியுடன் வந்து பேசிக்கொண்டிருந்த போது இடைநடுவே ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதிக்கு சிரித்தவாறு ஏதோ கூறினார். இதன்போது மஹிந்த ராஜபக்ஷவும் சிரித்துக்கொண்டு சைகை காண்பித்து பேசினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு