வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளரானார் தர்மலிங்கம் நடனேந்திரன்..!
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக தர்மலிங்கம் நடனேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டவர்களில் 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதனடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுடனான கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை யாழ்.மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அராலி தெற்கு மூலக் கிளையின் தலைவரும் முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினருமான தர்மலிங்கம் நடனேந்திரன் (கஜன்) தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், உப தவிசாளராக புளொட் அமைப்பின் சார்பில் வேலையா சச்சிதானந்தன் தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் இப் பிரதேச சபையில் விஸ்வலிங்கம் உமாபதி, தம்பிப்பிள்ளை சிவசுப்பிரமணியம், சண்முகநாதன் ஜெயந்தன், தர்மலிங்கம் துரைலிங்கம், பரமசிவம் பிள்ளை, சிற்றம்பலம் ஸ்ரீஜீவா, கந்தையா லங்கேஸ்வரன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பில் வெற்றியீட்டியவர்களாவர்.
இந்த தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, புௌாட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ கட்சி சார்பாக எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.