குரும்பசிட்டி பகுதியில் கிணற்றில், இருந்து பெருமளவு மோட்டார் குண்டுகள் மீட்பு!
வலி வடக்கு, குரும்பசிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்று பெருமளவு மோட்டார் குண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளன.
கிணற்றினை சுத்தம் செய்யும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்ட போது அதற்குள் பெருமளவு வெடி பொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த விசேட அதிரடி படையினரும், பொலிஸாரும் வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.