யாழ்.பருத்தித்துறையில் படையினர் மீது தாக்குதல் நடத்தி தப்பி ஓடியவர் கைது..! யாழ்.மாவட்டத்தில் 3 இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடனும் தொடர்பு..
யாழ்.பருத்துறை- மந்திகை பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த படையினர் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்ற 3 கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய புத்தளத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்துறை, சாவகச்சோி ஆகிய பகுதியில் இடம்பெற்ற 3 கொள்ளை சம்பவங்களுடன் குறித்த நபருக்கு தொடர்புள்ளதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கூறியிருக்கின்றனர்.
குறித்த நபர் சாவகச்சேரியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் சங்கிலிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டன. அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ப
ருத்தித்துறையில் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்புடையவர் என்று அறியப்பட்டது. அத்துடன், கடந்த 14ஆம் திகதி நள்ளிரவு மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக பாதுகாப்பு கடமையிலிருந்த படையினர் மீது
குறித்த நபர் கல்லினால் தாக்கிவிட்டு தப்பி சென்றதை ஒப்புக் கொண்டிருக்கின்றார். சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
என்றும் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.