யாழ்.உடுவில் பகுதியில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு..! வாள்கள், கோடரிகள், கத்திகளுடன் 3 ரவுடிகள் கைது, தாக்குதலுக்கு தயாராகினராம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுவில் பகுதியில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு..! வாள்கள், கோடரிகள், கத்திகளுடன் 3 ரவுடிகள் கைது, தாக்குதலுக்கு தயாராகினராம்..

யாழ்.உடுவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்டிருந்த அதிரடி சுற்றிவளைப்பில் வாள்வெட்டு குழு ரவுடிகள் 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், பெருமளவு வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டிருக்கின்றது. 

வாள்வெட்டு தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்கு தயாரான நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தபோது வீடொன்றுக்குள் பதுங்கியிருந்த 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களினால் தாக்குதல் ஒன்றுக்கு தயாராக வைத்திருந்த வாள்கள், 

கைகோரிகள், வீச்சு வாள்கள், கிறிஸ் கத்திகள், கைபிடி பொருத்தப்பட்ட வயர்கள் என சுமார் 20 கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மீட்கப்பட்ட வாள்கள் இரண்டில் குருதிக் கரை போன்ற படிவு காணப்பட்டது. 

அண்மையில் மல்லாகத்தில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகி ஜெகன் என்பவருடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலே இது என்பதும் ஆவா என அழைக்கப்படும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவே தயாராகி இருந்தனர்.

என்பதும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்தது. சந்தேக நபர்களுக்கு வேறு பொலிஸ் நிலையங்களில் வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்குகள் உள்ளனவா? என்று ஆராயப்படுகின்றன. 

இவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படவேண்டியுள்ளது” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு