பொலிஸார் மீது நாம் வாள்வெட்டு தாக்குதல் நடத்தவில்லை..! மதுபோதையில் கதவை உடைத்தபோது தகரமே வெட்டியது. கைதான இருவர் வைத்தியசாலையில்..
யாழ்.நகுலேஸ்வரம் புதிய கொலனி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விசேட தேவையுடையவர் அடங்கலாக இருவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
குடும்பத்தில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வாள்வெட்டுக்கு இலக்காகியிருந்தார்.
இதனையடுத்து இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். குறித்த இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம் மீது பொலிஸார் மூர்க்கத்தனமான தாக்குதல் நடாத்தியதாகவும், மதுபோதையில் வந்த பொலிஸார் பூட்டியிருந்த கதவை உடைத்து திறந்தபோது கதவில் இருந்த தகரமே வெட்டியதாகவும் கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில் பொலிஸாரின் தாக்குதலில் தாம் சுகயீனமடைந்துள்ளதாகவும், கூறியிருக்கின்றனர்.