யாழ்.மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கடும் காற்று..! 10 குடும்பங்களை சேர்ந்த 73 பேர் பாதிப்பு, 8 வீடுகள் சேதம், ஒருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கடும் காற்று..! 10 குடும்பங்களை சேர்ந்த 73 பேர் பாதிப்பு, 8 வீடுகள் சேதம், ஒருவர் காயம்..

யாழ்.மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களாக வீசிய கடும் காற்றினால் 10 குடும்பங்களை சேர்ந்த 73 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். 

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜா கூறியிருக்கின்றார். இது குறித்து இன்று மாலை ஊடகங்களை சந்தித்து மேலும் அவர் கூறுகையில், 

தற்போது நிலவி வருகின்ற அம்பான் புயலில் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதனுடைய தாக்கம் உணரப்பட்டுள்ளது, குறிப்பாக யாழ் மாவட்டத்திலும் காற்றின் தாக்கமானது 

கடந்த 24 மணி நேரத்திற்குள் உயர்வானதாக உணரப்பட்டுள்ளது.நேற்று வீசிய காற்றின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 குடும்பத்தைச் சேர்ந்த 73 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் 

8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் கைதடி பகுதியில் பாடசாலை ஒன்றும் சேதமடைந்துள்ளது மேலும் மயிலிட்டி பகுதியில் மரம் முறிந்து விழுந்து ஒரு பெண் காயமடைந்த நிலையில் 

தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றிர்.நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 

அவர் மீண்டும் கரைசேர்ந்துள்ளார். இந்த காலநிலையானது எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு எதிர்பார்ப்பதால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவால் அறுவுறுத்தப்பட்டுள்ளது.

நிலப்பகுதியில் காணப்படுகின்ற காற்றின் தாக்கத்தினை விட கடற்கரையில் அண்டிய பகுதியில் காற்றின் வேகம் கூடுதலாக காணப்படுவதனால் குறிப்பாக கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் 

இருக்குமாறும் மற்றும் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு