இனி மஹிந்தவை யாராலும் வெல்ல முடியாது: ஞானசார தேரர்…!

ஆசிரியர் - Admin
இனி மஹிந்தவை யாராலும் வெல்ல முடியாது: ஞானசார தேரர்…!
நாட்டை நேசிப்பவர்கள், பௌத்த மதகுருமார் உள்ளிட்டோரின் இலக்குகளும், நிலைப்பாடுகளுமே உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு காரணம் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலங்கைக்குள் தனது செயற்பாடுகள் மற்றும் கொள்கைகளின் ஊடாக பாரியளவில் சமூக நலன்களை பேணியுள்ளார். அதனால் அனைத்து சமூகத்தினரதும் அங்கீகாரம் அவருக்கு கிடைத்துள்ளது. அதனை ஏனைய தரப்பினர் தட்டிச் செல்ல முடியாது என்று ஞானசார தேரர் குறிப்பிட்டார். நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யவும் இல்லை. மேடைகளிலும் ஏறவில்லை. நாங்கள் கட்சி அரசியலில் ஈடுபடுவதும் இல்லை. முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் போராட்டங்களை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்க போவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள் இந்த செய்தியை வெளியிட்டதாக நினைத்து கொண்டு ஜீ.எல். பீரிஸ் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார். முஸ்லிம் மக்களை ஏமாற்ற மற்றுமொரு முயற்சி என ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு