சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு தயார் : கூட்டு எதிரணியின் தீர்மானம்
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நல்லாட்சி அரசாங்கம் படுதோல்வியடைந்துள்ளது. அரசாங்கம் கடந்த மூன்று ஆண்டுகள் முன்னெடுத்த கொள்கைத் திட்டத்தை சகல மக்களும் நிராகரித்துள்ளனர். அதனாலேயே குறுகிய காலத்தில் அமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பெருவெற்றியீட்ட வைத்துள்ளனர்.
மக்களை ஏமாற்றும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்தே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதனை மக்கள் தற்போது நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.
எனினும் சூழ்ச்சி மூலம் தொடர்ந்தும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கு பிரயத்தனம் காட்டி வருகிறது.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டு எதிர்க்கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருந்தபோதிலும் நாம் எமது நிலைப்பாட்டிலிருந்து விலகப் போவதில்லை.
எனவும் தேர்தலுக்கு முன்னரே ஐக்கிய தேசியக் கட்சி அங்கம் வகிக்கும் அரசாங்கத்தில் நாம் ஒருபோதும் அங்கம் வகிக்கப்போவதில்லை எனவும் அக்கட்சியால் தெளிவாக கூறப்பட்டுள்ளது.