புதிய உறுப்பினர்கள் பிரதேசங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்கள்! - விக்கி நம்பிக்கை

ஆசிரியர் - Admin
புதிய உறுப்பினர்கள் பிரதேசங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்கள்! - விக்கி நம்பிக்கை

பிரதேசசபைத் தேர்தல்கள் முடிவுற்று தேர்தல் முடிவுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. புதிதாகப் பிரதேசசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பில் மிகக் கூடிய அக்கறை காட்டி தங்கள் தங்கள் பிரதேசங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வவுனியா இந்துக்கல்லூரிவருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இயலக்கூடியளவு பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாடவும் அவர்களின் குறைகளைக் கேட்டறியவும் விருப்பமுள்ள போதும் சில நேரங்களில் அது தனது சக்திக்கு அப்பாற்பட்ட சில காரணிகளால் இயலாமல் போய்விடுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின் பின் நாம் எமது தமிழரெனத் தலை நிமிர்ந்து வாழும் காலம் உதயமாகியுள்ளது. எமது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் நாட்டின் விளையாட்டு அணிகளில் சேர்க்கப்பட்டு தமது சிறப்பை வெளிக்காட்டி வருகின்றார்கள். நாம் யாவரும் எமது சிறப்புக்களை ஊரறிய உலகறிய வெளிக்காட்ட வேண்டிய காலம் இப்பொழுது மலர்ந்துள்ளது எனவும் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு