யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 35 பேருக்கு கொரோனா பரிசோதனை..! மேலும் சிலர் அடையாளப்படுத்தப்படலாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 35 பேருக்கு கொரோனா பரிசோதனை..! மேலும் சிலர் அடையாளப்படுத்தப்படலாம்..

யாழ்.அரியாலை மற்றும் மானிப்பாய், தாவடி பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களில் 35 போின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டி ருக்கும் நிலையில், அறிக்கை இன்று வெளியாகவுள்ளது. 

சுவிஸ் போதகருடன் பழகிய அல்லது அவர் கலந்து கொண்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டமை க்காக வடக்கில் சுமார் 346 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பலாலி பகுதியி ல் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் 

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 20 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையி ல் 6 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களில் நெருக்கமாக பழகிய 

35 பேருடைய இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. பரிசோத னை அறிக்கை இன்று இரவு வெளியாகும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மேலும் கூறியிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு