துன்பகரமான செய்தி..! யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். மாவட்டத்தில் நோயாளர் எண்ணிக்கை 7 ஆனது..

ஆசிரியர் - Editor I
துன்பகரமான செய்தி..! யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர். மாவட்டத்தில் நோயாளர் எண்ணிக்கை 7 ஆனது..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் தொற்று எண்ணிக்க 7 ஆக அதிகரித்துள்ளது. 

இதனை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 

பலாலிப் பகுதியில்  தற்போது இருக்கின்ற  குறித்த அரியாலை மதகுருவோடு கூடிய அளவு தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கான பரிசோதனை  மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அவற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. அவர்களில் மூவருக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு