யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது..! எதற்கும் தயார் நிலையில் என்கிறார் பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது..! எதற்கும் தயார் நிலையில் என்கிறார் பணிப்பாளர்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை பரிசோதிக்கவும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும் தயார் செய்யப்பட்டிருக்கின்றது. 

மேற்கண்டவாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின் றார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

கொரோனாத்தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சமூகத்தில் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான சிகிச்சையை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கும்,

செயற்படுத்துவதற்கும் ஒரு ஆலோசனைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தொற்றுப்பரவலை தடுத்தல், சுயபாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு போன்றவற்றில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றது.

கொரோனா அபாய நிலைமையிலும் அத்தியாவசிய சிகிச்சைகளும், தீவிரமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சைகளும் நடைபெற்று வருகிறது.யாழ் மருத்துவபீட மாணவர்களின உதவியுடன் தொற்றா நோய்களுக்கான சிகிச்சையில் இருக்கும் 

நோயாளிகள் தமக்கு தேவையான மருந்து மாத்திரைகளை தொலைபேசி அழைப்பின் மூலம் நேரடியாக வீட்டில் அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வனர்த்த நிலைமையில் வைத்தியசாலை ஊழியர்களின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் போக்குவரத்து வசதிகள், உணவுப்பொருட்கள் வழங்கல், தங்குமிட வசதிகள் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறாக இந்த கடினமான சூழ்நிலையிலும்

அனைவரும் முழு வினைத்திறனுடன் செயற்படுவதற்கான வழிவகைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு