யாழ்.நாவற்குழியில் வீடு ஒன்று இராணுவத்தால் முற்றுகை..! சுவிஸ் போதகருடன் பழகியதால் தனிமைப்படுத்தப்பட்டவரின் வீடாம்..
கோப்பு படம்
யாழ்.அரியாலை மதபோதகருடன் நெருக்கமாக பழகியதன் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஒருவருடைய வீடு தற்போது இராணுவம் மற்றும், பொலிஸ், சுகாதார அதிகாரிகளினால் முற்றுகையிடப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
யாழ்.நாவற்குழியில் உள்ள குறித்த நபருடைய வீடு சற்று முன்னர் இராணுவத்தினால் முற்றுகையிடப்பட்ட நிலையில், பொலிஸார், சுகாதார அதிகாரிகள் அங்கு கூடியுள்ளனர். குறித்த நபர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள நிலையில்,
10 பேருடைய பரிசோதனை அறிக்கை இன்று வெளியாகும் என கூறப்பட்டிருப்பதால், குறித்த நபருடைய பரிசாதனையில் நோய் தொற்று என வந்திருக்கிறதா? சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இவை அனைத்தும் குறித்த நபருடைய வீட்டு சூழலில் வாழும் மக்களுடைய தகவலினை அடிப்படையாக கொண்டதாகும்.