முக்கிய படுகொலையில் இலங்கையின் உயர்­மட்ட அதி­கா­ரி­கள் விரை­வில் கைது

ஆசிரியர் - Editor II
முக்கிய படுகொலையில் இலங்கையின் உயர்­மட்ட அதி­கா­ரி­கள் விரை­வில் கைது

சண்டே லீடர் ஆசி­ரி­யர் லசந்த விக்­கி­ர­ம­துங்க படு­கொலை தொடர்­பாக உயர்­மட்ட பொலிஸ் அதி­கா­ரி­கள் மூவர் விரை­வில் கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

லசந்த படு­கொலை தொடர்­பில் இரா­ணு­வத்­தின் மூத்த அதி­காரி ஒரு­வர், குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் மீண்­டும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளார்.

ஒன்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் நடந்த படு­கொலை தொடர்­பாக இந்த இரா­ணுவ அதி­காரி ஏற்­க­னவே விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தார்.

அதே­வேளை, லசந்த விக்­கி­ர­ம­துங்க படு­கொலை தொடர்­பாக, கல்­கிசைக் காவல்­நி­லை­யத்­தின் குற்­றப் பி­ரிவு முன்­னாள் பொறுப்­ப­தி­காரி திஸ்ஸ சுக­த­பால, படு­கொலை தொடர்­பான விசா­ர­ணை­க­ளின் போது தக­வல்­களை மறைத்­தார் அல்­லது அழித்­தார் என்ற சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய, உயர்­மட்டப் பொலிஸ் அதி­கா­ரி­கள் மூவர் மற்­றும், ஏனைய சில­ரை­யும் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும், குற்­றப் புல­னாய்­வுப் பிரிவு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு