திட்டத்திற்கே நிதி ஒதுக்கப்படவில்லை..! இந்த லட்சணத்தில் வீதி புனரமைப்புக்கு அடிக்கல் நாட்டு விழா.. மக்கள் மந்தைகளா..?

ஆசிரியர் - Editor I
திட்டத்திற்கே நிதி ஒதுக்கப்படவில்லை..! இந்த லட்சணத்தில் வீதி புனரமைப்புக்கு அடிக்கல் நாட்டு விழா.. மக்கள் மந்தைகளா..?

ஜனாதிபதி கோட்டபாய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் “சப்ரிகம” திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்படவுள்ள வீதிக்கு கேள்வி கோரப்படாமல், எந்தவொரு நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யப்படாமல் அடிக்கல் நாட்டும் நிகழ்வு அவசர அவசரமா க இன்றைய தினம் நடைபெறவிருக்கின்றது. 

நாளை மறுதினம் 2ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ள நிலையில், மிக அவசர அவசரமாக இந்த பம்மாத்துவேலை இ டம்பெறுவதாக கூறப்படுகின்றது. 

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் பிரதேசசபைக்கு சொந்தமான ஒரு வீதி பிரதேசசபைக்கு தொியாமல் புனரமைப்பு செய்யப்படவுள்ளதாம் அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளதாக பெருமெடுப்பில் ஒழுங்குகள் நடக்கின்றன. 

ஆனால் அந்த வீதி எந்த நிறுவனத்தால் புனரமைப்பு செய்யப்படவுள்ளது? எவ்வளவு நிதியில் புனரமைப்பு செய்யப்படவுள்ளது? போன்ற எந்த வொரு தகவலும் இல்லை. மக்களை மந்தைகளாக்க சப்ரிகம என்ற திட்டத்திற்கே இன்றுவரை அரசாங்கம் நிதி ஒதுக்காத நிலையில், நிதி இல்லாத அந்த திட்டத்தின் கீழ் வீதி புனர மைப்பு செய்யப்படவுள்ளதாக மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகம் இன்று அரங்கேற்றப்படவுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு