யாழ்.கம்பா்மலை பகுதியில் இராணுவ சுற்றிவளைப்பு, தம்மை இராணுவம் மிகமோசமாக அச்சுறுத்தியதாக மக்கள் குற்றச்சாட்டு..
வல்வெட்டித்துறை- கம்பா்மலை பகுதியில் இன்று அதிகாலை படையினா் குவிக்கப்பட்டு திடீா் சுற்றிவளைப்பு சோதனை நடாத்தப்பட்டது,
அதிகாலை 5 மணியளவில் அதிகளவான இராணுவ நடமாட்டத்தை பொதுமக்கள் சிலா் அவதானி த்துள்ளனா். இதனையடுத்தே சுற்றிவளைப்பு குறித்து தொியவந்துள்ளது.
இதேவேளை குறித்த பகுதிக்கூடாக கடத்தப்பட்டுவரும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் அந்த பகுதியிலேயே பதுக்கிவைக்கப்படுவதாகவும், அதனை இலக்குவைத்தே இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடாத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை வீடு வீடாக நுழைந்த இராணுவத்தினா் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் விசாரணைகளை நடாத்தியதாக பொதுமகன் ஒருவா் கூறியிருக்கின்றாா்.